Monday 6th of May 2024 06:41:55 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
தமிழ்நாட்டில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று 817 பேருக்கு உறுதி!

தமிழ்நாட்டில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று 817 பேருக்கு உறுதி!


தமிழ்நாட்டில் புதிதாக இன்று (மே-27) 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த தெற்றாளர்களது எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் இன்றும் 558 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 11 ஆயிரத்து 645 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட தினமாக இன்று (மே-27) அமையுமளவுக்கு 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா தொற்றாளர்களது எணணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சையின் பின்னர் 9 ஆயிரத்து 909 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 8 ஆயிரத்து 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. இதில் 95 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE